கோயம்பேடு காய்கறி சந்தையில் மந்தமானது வியாபாரம் - சிறு வியாபாரிகளின் வருகை குறைந்ததால் விற்பனை பாதிக்கப்பட்டிருப்பதாக வர்த்தகர்கள் வேதனை
Apr 8 2020 11:15AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோயம்பேடு சந்தையில், காய்கறிகளின் வரத்து அதிகமாக இருந்தபோதிலும், சிறு வியாபாரிகளின் வருகை குறைந்து காணப்படுவதால், வியாபாரம் மந்தநிலையில் உள்ளது.
சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 150-ஐ நெருங்கியுள்ளது. எனினும், அதுகுறித்த அச்சமின்றி, அத்தியாவசிய பொருட்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வெளியில் வந்தவண்ணம் உள்ளனர். ஆனால், கோயம்பேடு சந்தையில், காய்கறிகள் வரத்து அதிகமாக உள்ளதால், அங்கு விலை குறைந்து காணப்படுகிறது. எனினும், வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் வரத்து இன்று குறைந்த அளவே உள்ளது. இதனால் வியாபாரம் மந்த கதியில் இருப்பதால், வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.