நீலகிரி மாவட்டத்தில் டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 5 கிலோ மீட்டர் சுற்றுவட்டார பகுதிகளுக்கு சீல் வைப்பு
Apr 6 2020 12:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பிய, சென்னை மற்றும் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் வசித்து வரும் பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.
டெல்லி மாநாட்டில் பங்கேற்று விட்டு நீலகிரி திரும்பிய 8 பேர், உதகை அரசு மருத்துவமனையில் வைத்து கண்காணிக்கப்பட்டு வந்தனர். இவர்களின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்யப்பட்டதில், 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில், உதகையை சேர்ந்த 2 பேர், குன்னூர் மற்றும் கோத்தகிரியைச் சேர்ந்த தலா ஒருவர் அடங்குவர். இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதிக்கப்பட்டவர்கள் வசித்து வரும் பகுதிகளைச் சுற்றி, 5 கிலோமீட்டர் சுற்றளவிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதிகளைச் சுற்றிலும், கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல், டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பிய, சென்னை மேடவாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி பகுதிகளைச் சேர்ந்த 18 பேர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கண்காணிக்கப்பட்டு வந்தனர். அவர்களில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அவர்களது வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டதுடன், அப்பகுதிகளைச் சுற்றிலும் தடுப்புகள் அமைத்து, போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.