நீலகிரி மாவட்டத்தில் டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 5 கிலோ மீட்டர் சுற்றுவட்டார பகுதிகளுக்கு சீல் வைப்பு

Apr 6 2020 12:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பிய, சென்னை மற்றும் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, பாதிக்‍கப்பட்டவர்கள் வசித்து வரும் பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.

டெல்லி மாநாட்டில் பங்கேற்று விட்டு நீலகிரி திரும்பிய 8 பேர், உதகை அரசு மருத்துவமனையில் வைத்து கண்காணிக்கப்பட்டு வந்தனர். இவர்களின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்யப்பட்டதில், 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில், உதகையை சேர்ந்த 2 பேர், குன்னூர் மற்றும் கோத்தகிரியைச் சேர்ந்த தலா ஒருவர் அடங்குவர். இதனையடுத்து முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கையாக, பாதிக்‍கப்பட்டவர்கள் வசித்து வரும் பகுதிகளைச் சுற்றி, 5 கிலோமீட்டர் சுற்றளவிற்கு சீல் வைக்‍கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதிகளைச் சுற்றிலும், கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல், டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பிய, சென்னை மேடவாக்கம், பள்ளிக்‍கரணை, வேளச்சேரி பகுதிகளைச் சேர்ந்த 18 பேர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கண்காணிக்‍கப்பட்டு வந்தனர். அவர்களில் 4 பேருக்‍கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அவர்களது வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டதுடன், அப்பகுதிகளைச் சுற்றிலும் தடுப்புகள் அமைத்து, போலீசார் நடவடிக்‍கை எடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00