கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக சென்னை ஆர்.கே.நகரில் தாங்களாகவே முன்வந்து கடைகளை அடைத்த வியாபாரிகள்
Mar 28 2020 2:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை ஆர்.கே.நகரில் வியாபாரிகள் தானாகவே முன்வந்து கடைகளை அடைத்துள்ளனர்.
ஆர்.கே.நகரில் உள்ள நேதாஜி நகர் பகுதியில், மளிகை மற்றும் காய்கறிக் கடைகள் இருந்த இடத்தில் செயல்படுவதற்கு பதிலாக, அங்குள்ள விளையாட்டு மைதானத்தை பயன்படுத்திக் கொள்ள காவல்துறையினர் அறிவுறுத்தியிருந்தனர். ஆனால், அங்கு கடைகள் அமைத்தால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என வியாபாரிகள் கருதுகின்றனர். இதையடுத்து, தாங்களாகவே முன்வந்து கடைகளை அடைத்துள்ளனர். கடைகள் வழக்கமாக செயல்படும் இடத்தில் அரசு அனுமதி அளித்தால், நேரக் கட்டுப்பாட்டை கடைபிடிப்போம் என்றும் கூறுகின்றனர்.