அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை - குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு டி.எஸ்.பி. எச்சரிக்கை
Mar 28 2020 1:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு டி.எஸ்.பி. திரு.ஜான் சுந்தர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனைக்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே பொருட்களை விற்பனை செய்யவேண்டுமென அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், சில வியாபாரிகள், காய்கறிகளின் விலையை அதிகரித்து விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து, குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுப்பிரிவு, சென்னை மாநகர காவல்துறை சார்பில், கோயம்பேட்டில் சோதனை நடைபெற்றது. இதுகுறித்து எமது ஜெயா தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்த குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு டி.எஸ்.பி. திரு.ஜான் சுந்தர், அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.