பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு : நின்ற படி இருசக்கர வாகனத்தை ஓட்டி சாகசம்
Mar 13 2020 5:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, ஊர்க்காவல் படை வீரர் ஒருவர் நின்ற படியே இரு சக்கரவாகனத்தை ஓட்டி சாதனை படைத்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் விழுப்பம் தாங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ஊர்க்காவல் படையில் சேர்ந்து பணியாற்றி வருகிறார். இருசக்கர வாகனம் மூலம் சாகசம் புரிய வேண்டும் என்று சிறுவயதில் இருந்து ஆர்வம் கொண்டிருந்த இவர், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது போன்ற குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, நின்ற படியே இரு சக்கரவாகனத்தை இயக்க முடிவு செய்தார். அதன்படி, திருவண்ணாமலையில் இருந்து வேட்டவலம் வரை தேசியக் கொடியை கையில் ஏந்தியவாறு 25 கிலோ மீட்டர் நின்றவாறு இருசக்கர வாகனத்தை ஓட்டி சாதனை படைத்துள்ளார்.