பிரசாத் ஸ்டூடியோ இடப்பிரச்னை தொடர்பாக இளையராஜா தொடர்ந்த வழக்‍கு - 2 வாரத்திற்குள் விசாரித்து முடிக்‍க கீழமை நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Feb 28 2020 9:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரசாத் ஸ்டுடியோவிலிருந்து தன்னை வெளியேற்றக்கூடாது எனக்கோரி, இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த வழக்கை, 2 வாரத்திற்குள் முடித்துவைக்கும்படி கீழமை நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இசையமைப்பாளர் இளையராஜா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் இருந்துதான், 40 ஆண்டுகளுக்கும் மேலாக தனது இசையமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில், பிரசாத் ஸ்டுடியோவிலிருந்து இளையராஜா வெளியேற வேண்டும் என ஸ்டுடியோ நிர்வாகம் தெரிவித்திருந்தது. இட உரிமை தொடர்பாக வழக்கு ஏற்கனவே சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இட உரிமை தொடர்பாக போதுமான ஆவணங்கள் தாக்கல் செய்தும், சிட்டி சிவில் நீதிமன்றம் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கவில்லை எனவும், நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் என்றும் இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை உயர்நீதிமன்றம் சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பியது. ஆனால் சமரச மையத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் உயர்நீதிமன்றத்தில், விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், இந்த பிரச்சினை தொடர்பாக சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை இரண்டு வாரத்துக்குள் முடித்து, உத்தரவு பிறப்பிக்கும்படி தீர்ப்பளித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00