நாமக்கல் மாவட்டத்தில் லாரியின் சக்கரம் பெண் மீது ஏறி இறங்கிய சம்பவம் : லாரி ஓட்டுனரிடம் போலீசார் விசாரணை
Feb 21 2020 9:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே, லாரியின் சக்கரம் பெண் ஒருவர் மீது ஏறி பலியான சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுந்தரம் நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர், தனது மனைவி ஜமுனா ராணியை, இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றபோது, ஆனங்கூர் செல்லும் சாலை பகுதியில், மூடப்படாத பள்ளத்தில் நிலைத்தடுமாறி விழுந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக, ஜமுனா ராணி மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இது குறித்து லாரியின் ஓட்டுனரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.