நாகை மாவட்டத்தில் மது அருந்தப் பணம் தர மறுத்த சகோதரியை கொல்ல முயற்சி - தீ வைக்க முயன்ற சகோதரரும், காப்பாற்ற சென்ற உறவினரும் தீயில் கருகி பலி
Feb 21 2020 9:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டம் சீர்காழி அருகே, மது அருந்தப் பணம் தர மறுத்த சகோதரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்ற சகோதரரும், காப்பாற்ற சென்ற உறவினரும் தீயில் கருகி உயிரிழந்தனர். சீர்காழி அருகே புத்தூர் பகுதியில் வசித்த மகேஷ், தனது சகோதரி மஞ்சுளா வீட்டிற்குச் சென்று மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். பணம் தராததால் ஆத்திரமடைந்த அவர், பெட்ரோலை மஞ்சுளா மீது ஊற்ற முயன்றார். இதனை தடுக்க முயன்ற உறவினர் தமிழரசன் மீதும், மகேஷ் மீது பெட்ரோல் ஊற்றியதில் தீப்பிடித்து இருவரும் உயிரிந்தனர்.