இந்தியன் -2 படப்பிடிப்பில் நேர்ந்த விபத்து அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது : நடிகர் சிம்பு இரங்கல்
Feb 21 2020 7:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியன் 2 படப்பிடிப்பில், உயிரிழந்தவர்களின் கனவு தொலைந்து போய்விட்டதே என்பதை நினைக்கும்போது, கண்களில் நீர் முட்டிக் கொண்டு வருகிறது என்று, நடிகர் சிம்பு இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், சினிமா தொழிலாளர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும், குறிப்பாக, சண்டைக் காட்சி நடிகர்களும், நூலிழையில் உயிர்தப்பியே தினம் வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர் என்றும், இந்தியன் -2 படப்பிடிப்பில் நேர்ந்த விபத்து, தன்னை அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். எத்தனை கனவுகளோடு விபத்தில் சிக்கியவர்களின் சினிமா பயணம் ஆரம்பித்திருக்கும்? அவர்களின் குடும்பத்தின் கனவுகளும் சேர்ந்தே தொலைந்து போய்விட்டதே என்பதை நினைக்க நினைக்க, கண்களில் நீர் முட்டிக் கொண்டு வருவதாகவும் நடிகர் சிம்பு இரங்கல் தெரிவித்துள்ளார்.