ஒகேனக்கல் வனப்பகுதியில், சூரியஒளி சக்‍தி மூலம் யானைகளுக்கு தண்ணீர் வழங்க ஏற்பாடு - வறட்சியை சமாளிக்க நடவடிக்கை

Feb 21 2020 7:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜெயா தொலைக்‍காட்சி செய்தி எதிரொலியாக, ஒகேனக்கல் வனப்பகுதியில் சூரியஒளி சக்‍தி மூலம் யானைகளுக்கு தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட யானைகள், ஒகேனக்கல் வனப்பகுதியில் உணவு மற்றும் தண்ணீருக்காக கோடைக்‍காலங்களில் இடம்பெயர்வது வழக்‍கம். தருமபுரி மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில், கர்நாடகாவில் இருந்து ஒகேனக்கல் வனப்பகுதிக்கு 200-க்கும் மேற்பட்ட யானைகள் இடம்பெயர்ந்து வந்துள்ளன.

காட்டு யானைகள் தண்ணீர், உணவின்றி உலா வருவதால் ஒகேனக்கல்லுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளதாகவும், இதற்கு வனத்துறை நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் என்றும் ஜெயா தொலைக்‍காட்சியில் அண்மையில் செய்தி ஒளிபரப்பானது.

இந்நிலையில், யானைக்‍கூட்டங்கள் தண்ணீரின்றி உயிரிழப்பதைத் தடுக்‍கவும், முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கையாகவும் ஒகேனக்கல் வனப்பகுதியில் சின்னாற்றுப் பகுதி மற்றும் ராசிகுட்டை வனப் பகுதிகளில் சூரியஒளி சக்‍தி மூலம் மின்சாரம் எடுத்து புதிதாக கட்டப்பட்ட தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. யானை மற்றும் வன விலங்குகள் தண்ணீர் அருந்த வசதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து தண்ணீர் அருந்திவிட்டு நீராடியும் விளையாடியும் இளைப்பாறி செல்கினறன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00