சி.ஏ.ஏ.வுக்கு எதிராக திண்டுக்கல்லில் 3-வது நாளாக நீடிக்கும் போராட்டம் : கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் ஆதரவு
Feb 21 2020 6:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குடியுரிமை திருத்த சட்டத்தைக் கண்டித்து, திண்டுக்கல்லில் மூன்றாம் நாளாக நடைபெற்று வரும் தர்ணா போராட்டத்திற்கு, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் நேரில் ஆதரவு தெரிவித்தனர்.
குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும், இச்சட்டத்தை நடைமுறைபடுத்த மாட்டோம் என சட்டமன்றத்தில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பேகம்பூர் திடலில் இஸ்லாமியர்கள் கடந்த 19ஆம் தேதி முதல் காலவரையற்ற தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், இஸ்லாமிய ஜமாத்தார்கள், பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இளைஞர்கள் மற்றும் பெண்கள் என ஏராளமானோர் மூன்றாம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கல்லூரி மாணவர்களும், இந்து இளைஞர்களும் நேரில் ஆதரவு தெரிவித்தனர். இஸ்லாமியர்களின் கோரிக்கைகளை ஏற்று இச்சட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என கல்லூரி மாணவர்கள் வலியுறுத்தினர்.