T.N.P.S.C. முறைகேடு தொடர்பான விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றக் கோரிய வழக்கு - தமிழக அரசு, சி.பி.ஐ. மற்றும் TNPSC தலைவர் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

Feb 21 2020 2:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

T.N.P.S.C. முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றக் கோரிய வழக்கில், தமிழக தலைமை செயலர், சி.பி.ஐ. மற்றும் TNPSC தலைவர் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

T.N.P.S.C. குரூப்-4 மற்றும் குரூப் 2-ஏ தேர்வில் நடைபெற்ற மோசடி தொடர்பான வழக்கை, சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கில், இதுவரை கீழ்மட்ட அலுவலர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், TNPSC-யின் அனைத்து நிலைகளிலும் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான வழக்கு விசாரணைகளை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனவும் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் திரு. துரைசுவாமி, திரு. ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இது குறித்து தமிழக தலைமை செயலர், சி.பி.ஐ. TNPSC-யின் தலைவர் ஆகியோர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை அடுத்த மாதம் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00