நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு : விவசாயிகளிடம் கூடுதலாக பெற்ற தொகையை திருப்பிக்கொடுக்க ராமநாதபுரம் ஆட்சியர் உத்தரவு
Feb 20 2020 7:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விவசாயிகளிடம் இருந்து கூடுதலாக பெறப்பட்ட தொகையை திருப்பி கொடுக்க வேண்டும் என ராமநாதபுரத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்ப்புக் கூட்டத்தின்போது நெல்கொள்முதல் நிலைய அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது, நெல்லை கொள்முதல் செய்வதற்கு தங்களை அதிகாரிகள் அலைக்கழிப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். மூட்டைக்கு 40 கிலோவிற்கு பதிலாக நாற்பத்தி ஒன்றரை கிலோ நெல்லை எடை கேட்பதாகவும், சுமை தூக்கும் தொழிலாளிகளுக்கு தனியாக கூலி கேட்பதாகவும் வேதனை தெரிவித்தனர். இதையடுத்து விவசாயிகளிடம் கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையை உடனடியாக அதிகாரிகள் திரும்ப கொடுக்க வேண்டும் என்றும் விவசாயிகளுக்கு உடனுக்குடன் அவர்களது கணக்கில் பணம் வரவு வைக்கவேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.