கன்னியாகுமரி மாவட்டத்தில் மளிகைக் கடையின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை - சிசிடிவி கேமரா ஹார்ட் டிஸ்கையும் திருடிச்சென்ற மர்மநபர்கள்
Feb 20 2020 6:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தில் மளிகை கடை பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். வடக்கு பகவதிபுரத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவர் வழுக்கம்பாறை நெடுஞ்சாலையில் தேநீர் மற்றும் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் இன்று காலை மளிகை கடையை திறக்க சென்றபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. மேலும் சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்கையும் மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.