திருப்பூர் மாவட்டம் அவினாசி சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோதி இரங்கல்
Feb 20 2020 3:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூர் மாவட்டம், அவினாசி சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு, பிரதமர் மோதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் நடந்த பேருந்து விபத்து மிகுந்த வேதனையை அளிப்பதாகவும், இந்த சோகமான தருணத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்காக பிரார்த்தனை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் மன தைரியத்துடன் இருக்க் வேண்டுமென்றும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.