அம்மா பிறந்தநாள் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரம் : கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை வரவேற்க தயாராகி வரும் அ.ம.மு.க-வினர்
Feb 20 2020 2:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாண்புமிகு அம்மாவின் பிறந்த நாளையொட்டி, நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் அ.ம.மு.க. பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. விழாவில் பங்கேற்கும் கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க கழகத்தினர் ஆயத்தமாகியுள்ளனர்.
மாண்புமிகு அம்மாவின் பிறந்த நாள் விழா, வரும் 24ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. இந்த நிகழ்ச்சியில், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் பங்கேற்க உள்ளார். இதனையொட்டி, கங்கைகொண்டானில் பிரம்மாண்டமான மேடை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. நெல்லை மாவட்டத்திற்கு வருகை தரும் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க, கழகத் தொண்டர்களும், நிர்வாகிகளும் ஆயத்தமாகி வருகின்றனர்.