தென்பெண்ணையாற்றின் குறுக்கே அணை கட்டும் விவகாரத்தில், சுமுக தீர்வுகாண நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிக்கை

Feb 20 2020 1:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

தென்பெண்ணையாறு விவகாரத்தில் சுமூக தீர்வு காண நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்றும், அதுவரை கர்நாடக அரசு புதிய அணைக்‍கட்டும் நடவடிக்‍கையை நிறுத்திவைக்‍க வேண்டும் என்றும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்‍கு தொடர்ந்துள்ளது.

தென்பெண்ணையாற்றின் குறுக்‍கே கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்‍க வலியுறுத்தி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை நிராகரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசை அணுகும்படி அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில், பெண்ணையாறு விவகாரம் தொடர்பாக, சமரசத்தீர்வை ஏற்படுத்த மத்திய அரசு குழு ஒன்றை அமைத்தது. இக்குழுவின் கூட்டம், வரும் 24-ம் தேதி நடைபெறும் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.

பெண்ணையாறு விவகாரத்தில் தீர்வு காண நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இந்த நிலையில், நடுவர் மன்றம் அமைப்பது குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும் வரை, புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்கக்கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், மார்ச் 24-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00