திருப்பூர் சாலை விபத்தில் கேரளாவைச் சேர்ந்த 21 பேர் உயிரிழந்த சம்பவம் - உறவினர்களிடம் உடல்களை ஒப்படைக்‍க கேரள அமைச்சர்கள் 2 பேர் வருகை

Feb 20 2020 1:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

அவினாசி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த கேரள மாநிலத்தவரின் உடல்களுக்‍கு அஞ்சலி செலுத்தவும், உறவினர்களுக்‍கு ஆறுதல் கூறவும் அம்மாநில அமைச்சர்கள் அடங்கிய குழுவினர் திருப்பூருக்‍கு வருகை தந்தனர்.

பெங்களூரிலிருந்து எர்ணாகுளம் நோக்கிச் சென்ற கேரள அரசுப் பேருந்தும், கேரளாவிலிருந்து சேலம் நோக்கி வந்துகொண்டிருந்த கண்டெய்னர் லாரியும், இன்று காலை அவினாசி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நேருக்‍கு நேர் மோதி விபத்துக்‍குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 21 பேர் உயிரிழந்தனர். 30-க்‍கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. கேரள போக்குவரத்துத்துறை அமைச்சர் சசீந்திரன் மற்றும் வேளாண்துறை அமைச்சர் சுனில்குமார், கேரள எம்.பி.க்கள் ஸ்ரீகண்டன் மற்றும் ரம்யா ஹரிதாஸ், பாலக்காடு மாவட்ட ஆட்சியர் பாலமுரளி ஆகியோர் உயிரிழந்தவர்களின் உடல்களை பார்வையிட்டு, அவர்களது உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00