டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு வழக்கு - இடைத்தரகர்கள் ஜெயக்குமார், ஓம்காந்தனுக்கு 6 நாள் போலீஸ் காவல் : சி.பி.சி.ஐ.டிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி
Feb 20 2020 1:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு வழக்கில் கைதான முக்கிய குற்றவாளிகளான ஜெயக்குமார், ஓம்காந்தன் இருவரையும், 6 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்தது அம்பலமானதை தொடர்ந்து, குரூப்-2ஏ, விஏஓ, ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளில் முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்குகளில் இடைத்தரகர்கள், தேர்வர்கள், அரசு ஊழியர்கள் என 51 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் முக்கிய இடைத்தரகர்களான ஜெயக்குமார் மற்றும் ஓம்காந்தனை மேலும் இரு வழக்குகளில் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இருவரையும் மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, சிபிசிஐடி தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.