திருப்பூர் அருகே பேருந்தும் டிப்பர் லாரியும் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் 20 பேர் உயிரிழப்பு - சேலம் அருகே நிகழ்ந்த மற்றொரு விபத்தில் 6 பேர் உயிரிழந்த பரிதாபம்
Feb 20 2020 12:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூர் அருகே அவினாசியில், கேரளாவைச் சேர்ந்த பேருந்தும், கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதியதால் ஏற்பட்ட விபத்தில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
பெங்களூரிலிருந்து எர்ணாகுளம் நோக்கிச் சென்ற கேரள அரசுப் பேருந்தும், கேரளாவிலிருந்து சேலம் நோக்கி வந்துகொண்டிருந்த கண்டெய்னர் லாரியும், அவினாசி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 20 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த பகுதியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.