சென்னை அருகே இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் 3 பேர் பலியான விபத்து - கிரேன் ஆபரேட்டர் மீது வெவ்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு
Feb 20 2020 12:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் ராஜன் என்பவர் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இயக்குனர் சங்கர் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு, பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள E.V.P. பிலிம் சிட்டியில் நடைபெற்றது. அப்போது எதிர்பாராதவிதமாக கிரேன் அறுந்து விழுந்ததில், உதவி இயக்குனர் கிருஷ்ணா உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த கிருஷ்ணா, பிரபல கார்டூனிஸ்ட் மதனின் மருமகன் ஆவார். காயமடைந்த ஐந்து பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்த நடிகர் கமல்ஹாசன், விபத்தால் தனது சகாக்களை இழந்து வாடுவதாக, வருத்தம் தெரிவித்துள்ளார்.