குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, தலைமைச் செயலக முற்றுகைக்கு தடை கோரிய மனு - அவசர வழக்‍காக விசாரிக்‍க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

Feb 18 2020 4:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, தலைமைச் செயலக முற்றுகை போராட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி தாக்‍கல் செய்யப்பட்ட மனுவை, அவசர வழக்‍காக விசாரிக்‍க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை, பேரணியாக சென்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிடப் போவதாக போராட்டக்‍காரர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு தடை விதிக்கக்கோரி, இந்திய மக்கள் மன்ற தலைவர் திரு. வாராகி தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்‍கல் செய்யப்பட்டது. பேரணியின்போது சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருப்பதால், போராட்டத்திற்கு தடை விதிக்‍க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அவசர வழக்‍காக‍ விசாரிக்‍க வேண்டும் என, நீதிபதிகள் திரு. சத்யநாராயணன் மற்றும் திருமதி. ஹேமலதா அமர்வில் கோரிக்‍கை வைக்‍கப்பட்டது. கோரிக்‍கையை நிராகரித்த நீதிபதிகள், வழக்‍கு பட்டியலில் வரும்போது விசாரணைக்‍கு எடுத்துக்‍கொள்ளப்படும் என தெரிவித்தனர். பேரணியின்போது, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால், அதனை காவல்துறை கண்காணித்துக்‍கொள்ளும் என்றும் நீதிபதிகள் கூறினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00