குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் தொடரும் போராட்டம் - சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றும் வரை போராட்டம் நீடிக்கும் என இஸ்லாமிய அமைப்பினர் திட்டவட்டம்
Feb 18 2020 3:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றும் வரை, போராட்டம் தொடரும் என இஸ்லாமிய அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
CAA, NPR, NRC ஆகிய சட்டங்களுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில், 5-வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்பினர் கலந்துகொண்டு, மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டபேரவையில் தீர்மான நிறைவேற்றப்படும் என நினைத்த நிலையில், சட்டசபை நடவடிக்கைகள் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதை போல் உள்ளதாகவும், தீர்மானம் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.