பணி நிரந்தரம் செய்யக்கோரி வடசென்னை அனல் மின்நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்
Feb 18 2020 3:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பணி நிரந்தரம் செய்யக்கோரி, வடசென்னை அனல் மின்நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின்நிலையத்தின் 5 அலகுகளில் நிலக்கரி எரியூட்டப்பட்டு, ஆயிரத்து 830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நிரந்தர பணியாளர்களாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையிலும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், ஒப்பந்த காலம் முடிந்தும் தங்களை நிரந்தர பணியாளர்களாக நியமிக்காமல் நிர்வாகம் காலம் தாழ்த்தி வருவதாக ஒப்பந்த தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பணி நிரந்தரம் செய்யாவிட்டால் அடுத்தகட்டமாக குடும்பத்தோடு குடியேறும் போராட்டம் நடைபெறும் என ஒப்பந்த தொழிலாளர்கள் எச்சரித்துள்ளனர்.