ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த ஒற்றை சிறுத்தை : சிசிடிவி கேமரா பதிவால் பொதுமக்கள் பீதி
Feb 18 2020 3:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே விவசாய நிலத்திற்குள் புகுந்த சிறுத்தை, கால்நடைகளை தாக்கியதை அடுத்து, கிராம அச்சம் அடைந்துள்ளனர்.
தாளவாடி அடுத்த தொட்டகாஜனூர் கிராமத்தில், பிரதாப் என்பவரது விவசாய நிலத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடு ஒன்று, ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். ஆட்டை கொன்றது சிறுத்தைதான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதை கூண்டு வைத்து பிடித்திட வேண்டும் என வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே, குடியிருப்பு பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில், சிறுத்தையின் நடமாட்டத்தை கண்டு அச்சமடைந்துள்ள கிராம மக்கள், சிறுத்தையை பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.