சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு : தண்டனையை ரத்து செய்யக்கோரி குற்றவாளி உமாபதி மேல்முறையீடு
Feb 18 2020 2:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், 5 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி, குற்றவாளி உமாபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், 5 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறையும், 9 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி, குற்றவாளி உமாபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். தண்டனையை நிறுத்தி வைத்து தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.