சேலத்தில் பட்டப்பகலில் எரிந்த பேருந்து - 80 பயணிகள் உயிர் தப்பினர்
Feb 18 2020 2:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலத்தில் 80 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து திடீரென தீ பற்றி எரிந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர்.
சேலம் கந்தம்பட்டி பாலம் அருகே வந்து கொண்டிருந்த அந்தப் பேருந்தின் டீசல் டேங்க் திடீரென தீப்பற்றியது. தீ மளமளவென பரவியதை உணர்ந்த ஓட்டுனர் பேருந்தை உடனடியாக நிறுத்திவிட்டு அனைத்து பயணிகளையும் இறங்கசெய்தார். சிறிது நேரத்தில் தி முழுவதும் பரவி பேருந்து முழுவதும் எரிந்து தீக்கிரையானது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.