நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் அ.ம.மு.க. சார்பில் வரும் 24-ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரம்
Feb 17 2020 6:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாண்புமிகு அம்மாவின் பிறந்த நாளையொட்டி, நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில், அ.ம.மு.க. சார்பில் வரும் 24-ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்திற்கான மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மாண்புமிகு அம்மாவின் 72-வது பிறந்தநாள், வரும் 24-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டக் கழகம் சார்பில், கங்கைகொண்டானில், வரும் 24-ம் தேதி, மாலை 4 மணியளவில் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் ஏழை-எளியோருக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறவுள்ளது. இதில் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் கலந்து கொண்டு எழுச்சியுரையாற்ற உள்ளார். கூட்டம் நடைபெறும் மைதானத்தில், மாபெரும் பந்தல் அமைப்பதற்கான, கால்கோள் நடும் நிகழ்ச்சி, கடந்த 14-ம் தேதி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.