மாண்புமிகு அம்மாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் கழக நிர்வாகிகள் ஆலோசனை
Feb 17 2020 6:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாண்புமிகு அம்மாவின் பிறந்த நாளையொட்டி, நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டம் குறித்து, திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில், கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வடக்கு ஒன்றியம், தெற்கு ஒன்றியம் மற்றும் பேரூர் கழகம் சார்பில், நத்தம் பகுதியில் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கிழக்கு மாவட்டக் கழக செயலாளர் திரு.ராமுத்தேவர் தலைமை தாங்கினார். மாண்புமிகு அம்மாவின் பிறந்தநாளை ஒட்டி, நெல்லை மாவட்டம், கங்கை கொண்டானின் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில், நத்தம் பகுதியிலிருந்து திரளான தொண்டர்கள் பங்கேற்பதேன்று, இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மாவட்டக் கழக அவைத் தலைவர் திரு.சவரிமுத்து, மாவட்ட கழகப் பொருளாளர் திரு.செல்வகுமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.