கொரோனா வைரஸூக்கு மருந்து தயாரித்த முதியவர் : ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்ததால் அதிகாரிகள் குழப்பம்
Feb 17 2020 5:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸூக்கு மருந்து தயாரித்து இருப்பதாகக் கூறி, முதியவர் ஒருவர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்ததால், அங்கிருந்த அதிகாரிகள் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பால், சீனாவில் பலியானோர் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், அந்த வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான மருந்தை கண்டுபிடிக்க, உலக நாடுகள் திணறி வருகின்றன. இதனிடையே, ராமநாதபுரத்தை அடுத்துள்ள வேதாளை கிராமத்தைச் சேர்ந்த திரு. மாணிக்கம் என்ற முதியவர், தான் கொரானோ வைரஸூக்கு மருந்து தயாரித்து இருப்பதாகவும், அதனை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்க வேண்டும் என்றும் கூறியதால், அங்கிருந்தோர் அவரைக் கண்டு நகைத்தனர். இதனையடுத்து, ஆட்சியரை சந்தித்து அந்த முதியவர் தான் தயாரித்த மருந்தை அளித்ததுடன், ஆராய்ச்சி கழகத்திற்கு அதனை அனுப்பி ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அதனை வர்த்தக ரீதியில் பயன்படுத்தாமல், பாதிக்கப்பட்ட சீனாவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.