மதுரை மாவட்டம் பனங்காடி பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு
Feb 17 2020 5:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மாவட்டம் பனங்காடி பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க இடைக்கால தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. பனங்காடியில் பள்ளி இயங்கி வருவதோடு, குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை தொடங்குவதற்கான முன்னேற்பாட்டிற்கு தடை விதிக்கக்கோரி பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், டாஸ்மாக் கடை திறக்க இடைக்கால தடை விதித்ததோடு, மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மண்டல டாஸ்மாக் மேலாளர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.