இயற்கை உரங்களை பசுமை உரக்குடில் மூலமாக பொதுமக்கள் இலவசமாக பெற்று கொள்ளலாம் : தாம்பரம் நகராட்சி தகவல்
Feb 17 2020 5:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பொதுமக்கள், இயற்கை உரங்களை பசுமை உரக்குடில் மூலமாக, இலவசமாக பெற்று கொள்ளலாம் என, தாம்பரம் நகராட்சி தெரிவித்துள்ளது. 500-க்கு அதிகமான ஊழியர்கள், பொதுமக்களிடம் இருந்து தினந்தோறும் குப்பைகளை சேகரித்து, தாம்பரம் பகுதியில் அமைந்துள்ள 8 பசுமை குடில்களுக்கு கொண்டு செல்கின்றனர். அங்கு அவை அரைக்கப்பட்டு, சிமெண்ட் தொட்டியில் பதப்படுத்தப்பட்டு பின்னர் விவசாயிகளுக்கு இயற்கை உரமாக வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.