இஸ்லாமிய மக்களை வன்முறை பாதைக்கு இழுக்கும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் சக்திசேனா இந்து மக்கள் இயக்கம் மனு
Feb 17 2020 5:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இஸ்லாமிய மக்களை வன்முறை பாதைக்கு இழுக்கும், அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சக்திசேனா இந்து மக்கள் இயக்கம் சார்பாக, வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக, சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில், பிரதமர் மோதி உள்ளிட்டோரை இழிவுபடுத்தி, சமூக வலைதளங்கள் மூலம் பொய்யான செய்திகளை பரப்பியதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக SDPI உள்ளிட்ட அமைப்புகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தி உள்ளனர்.