சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்‍கு : நீரி குழு அறிக்‍கையை 3 மாதங்களில் தாக்‍கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு உத்தரவு

Feb 17 2020 4:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீமை கருவேலமரங்களால் நிலத்தடி நீருக்கு பாதிப்பில்லை என்ற நிபுணர் குழு அறிக்கையை நீரி எனப்படும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவன ஆய்வுக்கு உட்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சீமை கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட கோரி மதிமுக பொது செயலாளர் திரு. வைகோ தொடர்ந்த வழக்கில், முதன்மை வன பாதுகாவலர் தலைமையிலான நிபுணர் குழு கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் உயர்நீதிமன்றத்தில் அறிக்‍கை சமர்ப்பித்தது. சீமை கருவேல மரங்களால் எதிர்மறை பாதிப்பு இல்லை என அறிக்‍கையில் தெரிவிக்‍கப்பட்டிருந்தது. நிபுணர் குழு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த திரு. வைகோ, அதனை, சுற்றுசூழல் ஆய்வுகளில் புகழ் பெற்ற, நீரி என்ற தேசிய சுற்றுசூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என வாதிட்டார். இதனை ஏற்றுக்‍கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், நிபுணர் குழு அறிக்‍கையை ஆய்வு செய்து, நீரி அமைப்பு அளிக்கும் அறிக்கையை, நீதிமன்றத்தில், 3 மாதங்களில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. வழக்கின் விசாரணை வரும் ஜூன் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்‍கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00