சென்னை வண்ணாரபேட்டை தாக்குதல் குறித்த முதல்வரின் பதிலுக்கு எதிர்ப்பு : சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
Feb 17 2020 2:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக அரசு அளித்த விளக்கம் திருப்தியளிக்காததால் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடிய இஸ்லாமிய மக்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பின. இதேபோல் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. எனினும் CAA எதிர்ப்பு தீர்மானம் குறித்துப் பேச சபாநாயகர் அனுமதி மறுத்தார். மேலும், வண்ணாரப்பேட்டை தாக்குதல் சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் அளித்த பதில் திருப்தி அளிக்கவில்லை என கூறி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.