பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் மீதான குண்டர் தடுப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு - தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

Feb 17 2020 3:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

பொள்ளாச்சி பாலியல் வழக்‍கில் திருநாவுக்‍கரசு உள்ளிட்டோரின் குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து, தமிழக அரசு செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளையும், இளம்பெண்களையும் ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதிஷ், வசந்தகுமார், ஆகியோர் மீது புகார் தெரிவிக்‍கப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட 4 பேரும் , கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவுபடி கடந்த மார்ச் மாதம் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்‍கப்பட்டனர். இதனை எதிர்த்து சபரிராஜன் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோரின் பெற்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்‍கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம், குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான ஆவணங்களை காவல்துறையினர் தெளிவாக பதிவு செய்யவில்லை எனக்‍ கூறி, ஆட்சியரின் குண்டர் சட்ட நடவடிக்‍கை உத்தரவை ரத்து செய்து கடந்த நவம்பர் மாதம் 1-ம் தேதி தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் தற்போதைக்கு தலையிட முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00