சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதற்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம் - குடியுரிமை திருத்தச்சட்டம் வேண்டாம் என்பதுதான் அ.ம.மு.க.வின் நிலைப்பாடு என்றும் பேட்டி

Feb 17 2020 2:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திண்டிவனத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த திரு.டிடிவி தினகரன், வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் பொதுச்சொத்தை சேதப்படுத்தியதால்தான் தடியடி நடத்தப்பட்டதாக எடப்பாடி பழனிச்சாமி கூறியது கண்டிக்கத்தக்கது என்றும், குடியுரிமை திருத்தச்சட்டம் வேண்டாம் என்பதுதான் அ.ம.மு.க.வின் நிலைப்பாடு என்றும் தெரிவித்தார். வண்ணாரப்பேட்டை சம்பவத்தை கண்டித்து, தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு ஆதரவாக, அமமுக நிர்வாகிகள் போராட்டங்களில் பங்கேற்றுள்ளதாகவும், தேவைப்பட்டால் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, நேரடியாக களத்தில் இறங்கிப் போராடவும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தயங்காது என்றும் கூறினார். வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவுக்கு சூழல் உள்ளதாக சட்டத்துறை அமைச்சரே கூறியிருப்பதிலிருந்து தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பது தெரிகிறது என்றும் திரு.டிடிவி தினகரன் அப்போது குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00