காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு - தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 2-வது நாளாக நேரில் விசாரணை

Jan 28 2020 1:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு தொடர்பாக, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 2-வது நாளாக நேரில் விசாரணை நடத்தினர்.

களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் படுகொலை வழக்கில் கைதாகியுள்ள அப்துல் சமீம் மற்றும் தவுபிக் ஆகியோரை காவலில் எடுத்து கன்னியாகுமரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்குப் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் கத்தி பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், இவர்கள் இருவரும் பல்வேறு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதும் இவர்களது சதித்திட்டம் குறித்து விசாரணை மேற்கொள்ளவும் இந்த வழக்கினை தேசிய புலனாய்வு முகமைக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது. அதன்படி, நாகர்கோவிலில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள இருவரிடமும் 2-வது நாளாக தேசிய புலனாய்வு முகமை டிஎஸ்பி திரு.ராதாகிருஷ்ணன், ஆய்வாளர் திரு.சிவகுமார் மற்றும் கேரள மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளர் அனிஷ் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக, காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00