செங்கல்பட்டு - கூடுவாஞ்சேரி தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை முதல் கடும் போக்குவரத்து நெரிசல் - ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வெளியூர் செல்லும் பயணிகள் அவதி
Jan 28 2020 10:06AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
செங்கல்பட்டு - கூடுவாஞ்சேரி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் அவதியடைந்தனர்.
சென்னையில் இருந்து திருச்சி நோக்கி செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில், நள்ளிரவில் ஒன்றன் பின் ஒன்றாக நின்ற கனரக வாகனங்களால், வெளியூர் செல்லும் பேருந்துகள் சுங்கச்சாவடியை கடக்க முடியாத நிலை ஏற்பட்டது. சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. நள்ளிரவில் அடிக்கடி இதுபோன்ற கனரக வாகனங்கள் செல்வதால் தொடர்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது வழக்கமாகி விட்டதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.