போடி ஏலத்தோட்ட விவசாய கல்லூரி விவகாரம் : உயர் கல்வித்துறை செயலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு
Jan 27 2020 8:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேனி மாவட்டம் போடி ஏலத்தோட்ட விவசாய கல்லூரியில், உதவி பேராசிரியர்கள் மற்றும் முதல்வர் பணி நியமனத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கில், பணியிடம் நிரப்புதல் குறித்து, உயர் கல்வித்துறை செயலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அக்கல்லூரியின் பணியிடங்களுக்கு, மறைமுகமாக ஆட்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கு பல கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாகவும், பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், பணியிடம் நிரப்புதல் தொடர்பான முடிவுகள், நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பிற்கு உட்பட்டது என உத்தரவிட்டப்பட்டுள்ளது.