எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் கைது - இலங்கை கடற்படையினரின் தொடர் அட்டூழியம்
Jan 27 2020 8:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம், மீனவர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதாகக் கூறி, இலங்கை கடற்படை அடிக்கடி கைது செய்வதும், அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்வதும், காலம் காலமாக அரங்கேறி வருகிறது. இன்று ராமேஸ்வரத்தில் இருந்து திரு. ஸ்வீட்டர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற 11 மீனவர்களையும், அவர்கள் சென்ற படகையும், நெடுந்தீவு அருகே, எல்லை தாண்டி மீன்பிடித்தாகக் கூறி, இலங்கை கடற்படை கைது செய்தது. மேலும், அவர்கள் அனைவரையும், விசாரணைக்காக காங்கேசன் துறை கடற்படை முகாமிற்க்கு அழைத்து சென்றுள்ளனர்.