டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முறைகேடு வழக்கில் விடைத்தாள்களை எடுத்து வந்த காவலர் உட்பட 3 பேர் கைது
Jan 27 2020 6:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முறைகேடு வழக்கில், விடைத்தாள்களை ராமேஸ்வரத்திலிருந்து சென்னை கொண்டு வந்த காவலர் உட்பட 3 பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில், ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள், 39 பேர் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதிசெய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்த 39 நபர்களுக்கும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளை எழுத ஆயுட்காலத் தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை கையில் எடுத்த சி.பி.சி.ஐ.டி., டின்.என்.பி.எஸ்.சி அதிகாரிகள், தேர்வர்கள், இடைத்தரகர்கள் என பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. கடந்த 4 நாட்களாக நடைபெற்ற விசாரணையில், இடைத்தரகர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, ராமேஸ்வரத்தில் இருந்து விடைத்தாள்காளை சென்னை கொண்டு வந்த பாதுகாப்பு காவலர் உட்பட 3 பேரை தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்துள்ளனர்.