மின்சாரம் இல்லாமல் இயங்கும் மிக்ஸியை தயாரித்து நாகை இளைஞர் சாதனை
Jan 24 2020 9:30AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை அருகே மின்சாரம் இல்லாமல் இயங்கும் மிக்ஸியை தயாரித்து தொழிற்பயிற்சி பயிலும் இளைஞர் சாதனை படைத்துள்ளார்.
நாகப்பட்டிணம் மாவட்டம் திருமருகல் மேல தெருவை சேர்ந்தவர் ஈஸ்வர் ராஜ். தொழிற் பயிற்சி மாணவரான இவர், பெருங்கடம்பனூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், தனது விடாமுயற்சி காரணமாக, மின்சாரம் இல்லாமல் இயங்கும் மிக்சியை கண்டுபிடித்து, ஈஸ்வர ராஜ் சாதனை படைத்துள்ளார். இந்த மிக்சியில், கைப்பிடியை சுழற்றுவதன் மூலம் தேவையான சமையல் பொருட்களை அரைத்துக் கொள்ளமுடியும் - பழச்சாறு தயாரிக்க முடியும் என தெரிவித்துள்ள ஈஸ்வர் ராஜ், இந்த முறை உடலுக்கு நல்ல உடற்பயிற்சியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.