ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்கும் திட்டங்களுக்கு விவசாயிகளின் அனுமதி தேவையில்லை என்ற மத்திய அரசின் அறிவிப்பிற்கு விவசாயிகள் கடும் கண்டனம்
Jan 20 2020 8:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்கும் திட்டங்களுக்கு விவசாயிகளின் அனுமதி தேவையில்லை என்ற மத்திய அரசின் அறிவிப்பிற்கு விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பருவம் தவறி பெய்த மழையால் பாதிப்படைந்த நெற்பயிர்களுக்கு, ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வலியுறுத்தி, விவசாயிகள் கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அழுகிய நெற்பயிர்களை கைகளில் ஏந்தியபடி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு விவசாயிகளின் அனுமதி தேவையில்லை என மத்திய அரசு அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டதற்கு விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.