காஞ்சிபுரம் மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவின் தலைக்கவச விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்
Jan 20 2020 8:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஞ்சிபுரம் மாவட்டத்தில், மகளிர் சுயஉதவிக் குழுவின் தலைக்கவச விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட ஆட்சியர் திரு. பா.பொன்னையா துவக்கி வைத்தார். இந்த பேரணியில், மகளிர் சுய உதவி குழுவைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் திரு. செந்தில்குமார், ஸ்ரீபெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலர் திரு. சுதாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.