ஊதிய உயர்வு அளிக்காவிட்டால் ஏப்ரல் மாதம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் - வங்கி ஊழியர்கள் சம்மேளனம் அறிவிப்பு
Jan 20 2020 8:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஊதிய உயர்வு அளிக்காவிட்டால், வரும் ஏப்ரல் மாதம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்குமென வங்கி ஊழியர்கள் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஊதிய உயர்வு ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையில், 30 மாதங்களாக புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் செய்யாததைக் கண்டித்து, வங்கி ஊழியர்கள் சம்மேளனம் சார்பில், சென்னை பாரிமுனையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தங்களது கோரிக்கையை அரசு ஏற்காததால், வரும் 31, ஒன்று ஆகிய தேதிகளிலும், மார்ச் மாதம் 11, 12, 13 ஆகிய தேதிகளிலும், போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.