தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்த வலியுறுத்தி மாநாடு - வரும் 22-ம் தேதி நடத்தப்படுமென பெரியகோயில் உரிமை மீட்புக்குழு அறிவிப்பு
Jan 20 2020 8:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு சமஸ்கிருதத்தில் தான் நடைபெறும் என்கிற தமிழக அமைச்சர்களின் கருத்து, தமிழுக்கும், தமிழ் ஆன்மிகத்திற்கும் எதிரானது என பெரியகோயில் உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் திரு.மணியரசன் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆகம விதிகள் தமிழிலிருந்தே சமஸ்கிருதத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாகவும், தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த வலியுறுத்தி, வரும் 22-ம் தேதி மாநாடு நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.