பெரம்பலூர் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் கும்பிடுபோட்டு மனு அளித்தனர்
Jan 20 2020 8:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெரம்பலூர் அருகேயுள்ள கல்பாடி கிராமத்தில் செயல்பட்டுவரும் மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் கும்பிடு போட்டு மனு அளித்தனர்.
கல்பாடி கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளாக டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. குடியிருப்பு பகுதிக்கு அருகில் இக்கடை அமைந்துள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மது குடிக்க வருபவர்கள் அப்பகுதியில் அரை குறை ஆடையுடன் சுற்றித் திரிவதுடன், தகாத வார்த்தைகளை பேசி வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கும் அப்பகுதி பெண்கள், நாள்தோறும் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். ஆகையால், இப்பகுதியில் அமைந்திருக்கும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, 50க்கும் மேற்பட்ட பெண்கள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கும்பிடு போட்டு மனு அளித்தனர்.