குரூப்-4 தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார் : முறைகேட்டில் ஈடுபட்டவர்களை நீக்கி புதிய தரவரிசை வெளியிட டி.என்.பி.எஸ்.சி. திட்டம்
Jan 20 2020 8:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களை நீக்கிவிட்டு, புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட டி.என்.பி.எஸ்.சி. முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி 'குரூப் 4' தேர்வை, 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர். இதில் ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய 2 மையங்களில் தேர்வு எழுதிய 57 பேர், தரவரிசைப்பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் இடம்பெற்றிருந்தனர். இதனால், இந்த மையங்களில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக சந்தேகம் எழுந்ததையடுத்து, 57 தேர்வர்களில், 20 பேருக்கு கடந்த 13-ம் தேதி மறுதேர்வு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களை மட்டும் நீக்கிவிட்டு புதிய தரவரிசைப் பட்டியல் தயார் செய்யவும், இந்த முறைகேடு குறித்து காவல் துறையில் புகார் அளிக்க உள்ளதாகவும், டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.