திருச்சியில் துப்புரவுத் தொழிலாளர்கள் பணிநீக்கத்திற்கு கண்டனம் : தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
Jan 20 2020 1:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அகில இந்திய வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற துப்புரவுப் பணியாளர்களின் பணிநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, அரியமங்கலம் மாநகராட்சி கோட்ட அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட ஸ்ரீரங்கம், அரியமங்கலம், கோ-அபிஷேகபுரம், பொன்மலை ஆகிய 4 கோட்டங்களில் சுமார் ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அண்மையில் நடைபெற்ற அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றதாகக் கூறி 20 பேர் எவ்வித முன்னறிவிப்புமின்றி பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதனை கண்டித்தும், அவர்களை மீண்டும் பணியமர்த்தக் கோரியும் தொழிலாளர்கள் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.